மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலர் S$1 மதிப்பு RM3.50 வரை உயர்ந்துள்ளது.
அதாவது இன்று அக்டோபர் 24, செவ்வாய் நிலவரப்படி அதன் மதிப்பு அத்தகைய உச்சத்தை தொட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடைவேளை, ஓய்வு உள்ளிட்டவை கட்டாயம் – அக். 24 முதல் புதிய விதிகள் அறிமுகம்
கூகிள் முடிவுகளின்படி, கடந்த அக்டோபர் 22, முதல் ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
கடைசியாக கடந்த ஜூலை 12 அன்று சிங்கப்பூர் டாலர் எப்போதும் இல்லாத அளவு வரலாற்று உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் வரை, மலேசியா ஏற்றுமதி ஏழு மாதம் சரிவை சந்தித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவின் மந்தநிலை அதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.