சிங்கப்பூரில் இனவாதம் உள்ளதா? என்று சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் கூறிய அமைச்சர் கே.சண்முகம்; “மற்ற பல இன சமூகங்களில் இருப்பதைப் போலவே, சிங்கப்பூரிலும் இனவாதம் உள்ளது” என்றார்.
ஜாலான் புக்கிட் மேராவில் கத்திக்குத்து… ஆடவரை வளைத்து பிடித்தது போலீஸ்
குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிராக இனவாதம் உள்ளதா என்று கேட்டதற்கு, சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் அவ்வாறு பதிலளித்தார்.
பிபிசியின் நடப்பு விவகாரங்கள் நிகழ்ச்சியான Hardtalk இல் சிங்கப்பூரில் இனப் பாகுபாடு குறித்து தொகுப்பாளர் ஸ்டீபன் சாக்கூர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
“இனவாதம் எவ்வளவு நடக்கிறது?” என்பதை கவனிக்க வேண்டும் என்று பதிலளித்த சண்முகம், இது சிங்கப்பூரில் மிகவும் குறைவு என சொன்னார்.
“சிங்கப்பூரில் சிறுபான்மையினராக எனது சொந்த அனுபவம் மற்றும் பலரின் அனுபவத்தின் அடிப்படையில்; இனவாதம் என்பது மொத்தத்தில், பல சமூகங்களுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் இது மிகவும் குறைவு” என்றார்.