கோவை சர்வதேச விமான நிலையத்தில் 1.9 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது
ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்திருந்த இரண்டு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1.9 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணையானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை, திருச்சி விமான நிலையங்களில் தங்கக்கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது நினைவுக்கூறத்தக்கது.