சென்னையில் இருந்து சிங்கப்பூர்… ரூ.25 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!!

(Photo: Dailythanthi)

சென்னை சரக்கக முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்திச்செல்ல முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 495 கிலோ எடைகொண்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தஞ்சோங் பகார் விபத்து: காதலனைக் காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு கடுமையான தீ காயம்….

அப்போது சுமார் 12 பெட்டிகளில், சுத்தமான 600 காட்டன் படுக்கை விரிப்புகள் (பெட் சீட்) சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவைகள் அதிக எடையுடன் இருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது, பின்னர் அந்த பெட்டிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சோதனையில், பெட் சீட்டுகளுக்குள் மரக்கட்டைகள் மறைத்து வைத்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், அவை செம்மரக்கட்டைகள் என பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

செம்மரக்கட்டைகள் ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், அதை ஏற்றுமதி செய்த நிறுவன உரிமையாளரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சோங் பகார் விபத்து: காதலனைக் காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு கடுமையான தீ காயம்….