சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய பாங்காக்-சிங்கப்பூர் விமானம் – விமானம் நிற்கும் முன்பே உடைமைகளை எடுக்க அவசரப்படும் SIA பிரீமியம் எகானமி பயணிகள் !

உலகின் சிறந்த விமானச் சேவை: இரண்டாம் இடம் பிடித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை
SIA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானத்தில், விமானம் நிற்பதற்கு முன்பே, அதில் பயணம் செய்த ஒரு சில பிரீமியம் எகானமி பயணிகள் பொறுமையை கையாளாமல் அவசரமாக தங்கள் லக்கேஜ்களை எடுக்க தள்ளுமுள்ளு செய்துள்ளனர். ஆகஸ்ட் 23 அன்று பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் செல்லும் SIA விமானத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது குறிந்த காணொளி ஒன்று வைரல் ஆகியுள்ளது. மாலை 4:15 மணியளவில் சாங்கி விமான நிலையத்தில் ஓடுபாதையில் விமானம் தரையிறங்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது, அப்போது விமானத்தில் இருந்த சிலர்  விமானம் நகர்ந்து கொண்டிருக்கும் போதே அவர்களின் உடைமைகளை எடுக்க முற்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது இரண்டு விமானப் பணிப்பெண்கள் பயணிகளை இருக்கையில் அமருமாறு பலமுறை அறிவுறுத்திய பின்பு அமர்ந்துள்ளனர்.

அந்த கானொளியில் “அந்த சிங்கப்பூரர்கள் அனைவரும்” என்று ஒருவர் முணுமுணுத்ததும் குறிப்பிடத்தக்கது.