“சிங்கப்பூரில் 39 வயது இளைஞரைக் காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 07.00 AM மணி முதல் 39 வயதான ஒரு இளைஞரைக் காணவில்லை. இவர் கடைசியாக, பிளாக் 153A லோர் 1 தோவா பயோஹ்- கில் (Blk 153A Lor 1 Toa Payoh) இருந்துள்ளார்.

தொடர்ச்சியாக upskirt வீடியோ எடுக்கும் ஆசாமி – மீண்டும் அதே வீடியோ… 36 வார சிறை விதிப்பு

மேலும், அந்த இளைஞர் மஞ்சள் நிற டி-சர்ட் (Yellow t-shirt) மற்றும் சாம்பல் நிற ஷார்ட்ஸை (Grey Shorts) அணிந்திருந்துள்ளார். இவர் குறித்து யாருக்கேனும் தகவல் கிடைத்தாலோ, இளைஞரைப் பார்த்தாலோ பொதுமக்கள் உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையினரின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் கொடுக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.