சிங்கப்பூர் – சென்னைக்கு புதிய டிரீம்லைனர் விமானம் அறிமுகம்…!

Singapore Airlines to operate Boeing 787-10 to Chennai

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சென்னை – சிங்கப்பூர் வழியில் போயிங் 787-10 ரக விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

ஏர்பஸ் A330-300 விமானங்களுக்கு பதிலாக, அடுத்த ஆண்டு சென்னை-சிங்கப்பூர் வழியில் போயிங் 787-10 விமானங்களை அறிமுகப்படுத்த உள்ள முதல் சர்வதேச விமான நிறுவனம் என்ற அந்தஸ்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது.

இந்த புதிய தலைமுறை விமான வகையின் ஆரம்ப சேவை, மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த SQ529 விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 23:15 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் இரண்டு வகுப்புகளில், 337 இருக்கைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் 36 பிசினெஸ் வகுப்பு இருக்கைகள் மற்றும் 301 எகனாமிக் வகுப்பு இருக்கைகளும் உள்ளன.