காப்பீட்டுத் தொகை உயர்வு! – சிங்கப்பூர் ஆயதப்படை மற்றும் சீருடைப் பிரிவில் பணிபுரிபவர்களுக்கு இழப்பீடு!

singapore soldiers training army

சிங்கப்பூர் ராணுவத்திலும் உள்துறை அமைச்சகத்தின் சீருடைப் பிரிவுகளிலும் பணிபுரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.அவர்களுக்கு ஒவ்வொரு காப்பீட்டின் கீழும் கிடைக்கக்கூடிய தொகை 150 000 வெள்ளியில் இருந்து 300 000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தனிநபர் காயம்,ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டுக்கும் அது பொருந்தும்.ஜனவரி 2,2023 முதல் அந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதாகத் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது.

புதிய காப்பீட்டு கொள்கையின்படி செவிப்புலன் குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.இந்த மாற்றத்தால் சுமார் ஐந்து லட்சம் சேவையாளர்கள் பயனடைவர்.

காப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவோ தங்களுடன் இருப்பவர்களுக்கும் காப்பீடு எடுக்கவோ விரும்பும் நபர்கள், குறைவான காப்பீட்டுத் தொகையைச் தவணையாக செலுத்தி அதிக பலனைப் பெறலாம்.