களைகட்டும் கலை வாரம் ! – கலைகள் கொண்டாடும் இடமாகும் சிங்கப்பூர்!

(Photo: Reuters)

சிங்கப்பூரின் கலைதிருவிழாக் கொண்டாட்டம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பத்து நாள்களுக்கு நடைபெற உள்ளது.பல்வேறு கலைநிகழ்சிகள் இடம்பெற உள்ளதால் ஏற்பாட்டாளர்கள் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சிங்கப்பூரை கலைகள் கூடும் அழகான இடமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.ஜனவரி 6 முதல் ஜனவரி 15 வரை கலைத் திருவிழாக் கொண்டாடப்பட உள்ளது.சில நிகழ்சிகளில் பொதுமக்கள் பங்கேற்று தனித்துவமான கலைகளை வெளிப்படுத்தலாம்.

சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றம் கலை படைப்புகள்,மாறுபட்ட சிந்தனை நிறைந்த படைப்புகள் போன்றவற்றை அளிக்க திட்டமிட்டுள்ளது.

கலைவாரத்தில் சுமார் 130-க்கும் மேற்பட்ட நிகழ்சிகளையும் கண்காட்சிகளையும் தேசிய கலைகள் மன்றம் நடத்தும்.

கலை சார்ந்த விளையாட்டு உணர்வு அடிப்படையில் கலைவிழா நடைபெறும் என்று மன்றத்தின் துணைத் தலைமை நிர்வாகி லோ எங் டியோங் கூறினார்.