சிங்கப்பூரில் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி தகுதி பெற ஆங்கில தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது.
அதாவது மேற்கண்ட விண்ணப்பத்தை மதிப்பிடும் போது ஆங்கில தேர்வு அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உள்துறை விவகாரங்களுக்கான இரண்டாவது அமைச்சர் ஜோசஃபின் தியோ, ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாதோர் வெளிநாட்டு வாழ்க்கைத் துணையாக இருக்கக்கூடும் என்றார்.
மேலும் அத்தகைய சோதனை எவ்வளவு உதவக்கூடும் என்பதில் தனது சந்தேகங்களை அவர் வெளிப்படுத்தினார்.
அதற்கு பதிலாக, விண்ணப்பித்தவரின் குடும்ப உறவுகள் இங்கு உள்ளனரா அல்லது அவர்கள் தேசிய சேவையை முடித்தார்களா என்பது போன்ற பல்வேறு அம்சங்களை ICA அதிகாரிகள் கருத்தில் எடுத்து கொள்வதாக திருமதி தியோ தெரிவித்தார்.