சிங்கப்பூர் கடற்கரையில் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கொட்டுவது போன்ற காட்சி..!

(photo: mothership)

சிங்கப்பூர் கடற்கரையில் நேற்று (ஜூலை 10) நீர்வீழ்ச்சி கொட்டுவது போன்ற காட்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.

அய்மான் ஹுஸ்னா என்பவர் படமாக்கிய அந்த காணொளி, சிங்கப்பூரின் கிழக்கு முனையில் உள்ள தானா மேரா ஃபெர்ரி டெர்மினல் அருகே ஏற்பட்டதாக குறிப்பிடத்தப்பட்டுள்ளது.

சுமார் 20-30 நிமிடங்கள் நீர்வீழ்ச்சி நீடித்ததாகவும், மேலும் மற்றொன்று அருகிலுள்ள கப்பல்கள் நங்கூரமிடும் இடத்திற்க்கு அருகில் உருவானது என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரின் கடலோர பகுதிகளில் அவ்வப்போது நீர்வீழ்ச்சி தோன்றும் எனவும், அவை வழக்கமாக கடற்கரையை அடைந்தவுடன் விரைவாகக் கலைந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.