ஆசியான் கிரிக்கெட் கவுன்சில் (Asian Cricket Council- ‘ACC’), நேபாளத்தில் நடத்தும் ஆசிய ஆண்கள் கிரிக்கெட் பிரிமியர் கோப்பை 2023- க்கான (ACC Men’s Premier Cup- 2023) சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பிடித்துள்ளனர். அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம், கீழ்க்குடியைச் சேர்ந்த காளிமுத்து ரமேஷ் (வயது 33), திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டையைச் சேர்ந்த ஊமைத்துரை திலீபன் (வயது 29) ஆகியோர் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் உள்ளனர்.
சிங்கப்பூரில் விதவிதமான தமிழ் பாரம்பரிய உணவுகளைச் சுவைக்க ஒரு வாய்ப்பு!
இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் இடம் பெற்றிருப்பது சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்காக ஆல் ரவுண்டர்களாகக் களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இந்திய மரபுடைமை நிலையம்!
ஆசிய ஆண்கள் கிரிக்கெட் பிரிமியர் கோப்பை 2023- க்கான குரூப் ‘ஏ’ பிரிவில் ஓமன், நேபாளம், கத்தார், மலேசியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், குரூப் ‘பி’ பிரிவில் சிங்கப்பூர், ஹாங்காங், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளனர்.
பணி நேரம் போக, மற்ற நேரங்களில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு, கடின உழைப்பாலும், முயற்சியாலும் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள இந்திய ஊழியர்களுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பல தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.