கிரிப்டோ கரன்சி எனப்படும், இணைய வழியில் வாங்கப்படும் நாணயத்தில் மிகப்பெரிய அளவிலான மோசடி நடந்து வருகிறது.
சொற்ப வருமானம் ஈட்டும் வெளிநாட்டு பணியாளர்களை குறிவைத்து, அதில் முதலீடு செய்தால், உடனே பல மடங்கு பணம் பெருகும் என ஆசை தூண்டப்படுகிறது.
அது பார்க்க வர்த்தக முதலீட்டு திட்டங்கள் போல இருக்கும். உண்மையில் மக்களை ஏமாற்ற உருவாக்கப்பட்ட மோசடி திட்டங்கள் அவை என சிங்கப்பூர் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அந்த போலி அறிக்கைகளில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்தால் அது வேறு இணையப்பக்கங்களுக்கு உங்களை கொண்டு செல்லும்.
அந்த இணையப்பக்கங்களில் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்ய சொல்லி கேட்கும்.
அதில் உங்களது விவரங்களை கொடுத்த உடனே திட்டத்தின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு ஒரு சிலர் தொலைபேசி மூலம் அழைப்பார்கள்.
அவர்களின் பேச்சு மூளை சலவை செய்யும் படி இருக்கும். முதலீடு தொடர்பாக எவ்வித முடிவையும் எடுப்பதற்கு முன்பு சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இணையப்பக்கத்துக்குச் சென்று தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ளும்படி காவல் துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
இதுபோன்ற மோசடி அறிக்கைகள் சிலவற்றில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஆகியோரின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டன.
அவற்றை நம்ப வேண்டாம் என போலீசார் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு பொதுமக்களை எச்சரித்தனர்.