சிங்கப்பூர் பாயா லேபார் வட்டாரத்தில் அடிதடி சண்டை ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாயா லேபார் டாக்சி நிறுத்துமிடத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ஆண்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சி மே 3 அன்றே இணையதளங்களில் வைரலானது.
ஒரு ஊழியரை தரையில் கிடாத்தி 5 பேர் கொண்ட கும்பல் கண்மூடித்தனமாக தாக்குகிறது. மற்றொரு வீடியோவில் ஒருவரை, பெரிய கும்பல் துரத்திச் செல்கிறது.
இந்த தாக்குதல் சம்பவம் மாலை நேரத்தில் நடந்த நிலையில், இரவு வாக்கிலேயே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த இடத்தில் பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுவே தொடர்கதையாகி வரும் நிலையில் காவல் துறை முறையாக திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.