திருச்சி சென்ற சிங்கப்பூர் விமானம் அவசர அவசரமாக சென்னைக்கு திருப்பம் – வானில் நடந்த சம்பவம்!

Kind attention passengers travelling to Tamil Nadu - HCI Singapore
Kind attention passengers travelling to Tamil Nadu - HCI Singapore

திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி ஏர்போர்ட் நோக்கி வந்து கொண்டிருந்தது.

ஞாயிற்றுகிழமை மாலை 6.30 மணி அளவில் திருச்சியை நெருங்கிய போது, திருச்சி விமான நிலையத்தில் கனமழை பெய்தது.

இதனால் அந்த விமானம் திருச்சியில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. விமானத்தை இறக்கினால் வழுக்கும் சூழல் உருவாகி அது ஆபத்தாக முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து 150 பயணிகளுடன் சிங்கப்பூர் விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மழையின் தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் சென்னையில் இருந்து மீண்டும் திருச்சி ஏர்போர்ட் வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதன் காரணமாக விமான பயணிகள் 150 பேரும் கடும் அவதி அடைந்தனர்.