சிங்கப்பூர் ராட்டினம் தற்காலிக மூடல் – காரணம் என்ன ?

சிங்கப்பூர் ராட்டினம் (Singapore Flyer) பிலைட்ஸ் செயல்பாடுகள் மார்ச் 1 முதல் ஏப். 2, 2023 வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஃப்ளையரின் பேஸ்புக் பதிவில் அது குறித்த நினைவூட்டல் செய்தி கடந்த பிப்ரவரி 27, 2023 அன்று வெளியிடப்பட்டது.

சிங்கப்பூர் ஃப்ளையரின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது; “மாற்று மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.”

இருப்பினும், டைம் கேப்சூல் மற்றும் ரீடெய்ல் டெர்மினல் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.