சிங்கப்பூர் GIIS, SMART Campus – Grade 2 மாணவர்கள் 150 வது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் தினத்தை போற்றும் வகையில் பள்ளி வளாகத்தில் “காந்தி ஏக் யாத்திரை” என்ற தலைப்பில் ஒரு சிறு நாடகத்தை வழங்கினர்.
மாணவர்கள், காந்தி அடிகள் கடந்து வந்த வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை நம்பிக்கையுடன் தைரியமாக உரிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
இந்த நாடகத்தைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.