8 பேரை ஏமாற்றி மொத்தம் $27,000க்கும் மேற்பட்ட தொகையைச் சுருட்டியதாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணுக்கு 31 வயதாகிறது. வாடகை மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஈசூனில் வாடகை வீடு ஒன்றை எடுத்து தருவதாகக் கூறி $5,400 ஏமாற்றிவிட்டதாக ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்தே அப்பெண் கைது செய்யப்பட்டார்.
இதே போல இன்னொரு வழக்கில் மற்றொரு பெண், ஒரு ஆணிடம், “உங்களால் தான் நான் கரப்பமடைந்து இரண்டை குழந்தை பெற்றேன்” என கூறினார்.
அதனை நம்பிய ஆண் $300,000க்கும் மேற்பட்ட தொகையை அப்பெண்ணுக்கு கொடுத்தார்.
முதலில், 2019 ஆகஸ்ட்டில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் இரட்டை பிள்ளைகளைச் சுமப்பதாகவும் அந்த ஆணிடம் கூறினார்.
2020ல் பிறந்த அந்த இரட்டை பிள்ளைகளுக்கு அந்த ஆண்தான் தந்தை என்று அடுத்த இரண்டாண்டு காலமாக தெரிவித்தார்.
இருந்தும் அந்த ஆண் தன் பிள்ளைகளுக்குத் தந்தை என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. அதேவேளையில், மருத்துவச் செலவுக்காக அவர், $314,000 தொகையை அந்த பெண்ணுக்கு கொடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.