‘சிங்கப்பூரில் இரண்டு சிறுமிகளை காணவில்லை’- தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜூலை 11- ஆம் தேதி அன்று மதியம் 01.00 மணியளவில் 13 வயது மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளைக் காணவில்லை. இவர்கள் இருவரும் கடைசியாக, ஜலான் மின்யாக் (Jalan Minyak) என்ற இடத்தில் காணப்பட்டுள்ளனர். இவர்களை பொதுமக்கள் யாரேனும் பார்த்தால் சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘கோவை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அதேபோல், காணாமல் போன இரண்டு சிறுமிகளின் படங்களையும் சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், காணாமல் போன சிறுமிகளைக் கண்டுபிடிக்கும் பணிகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.