பிளாட்ஃபார்ம் ஒர்க்கர்ஸ் எனப்படும் உணவு விநோயோகம் செய்யும் ஊழியர்கள், தனியார் வாகன ஓட்டுநர்களுக்கான விதிமுறைகள் முறையாக வகுக்கப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் போதே, சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கான இழப்பீடு பெறுவது கடினம்.
அவர்களுக்கு பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டத்தைப் பயன்படுத்த இயலுமா என்பது குறித்து ஆராய ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.
தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், விநியோக ஊழியர்கள் போன்ற பணித்தள ஊழியர்கள், வருமானத்திற்குப் பெரும்பாலும் இணைய வழியில் வரும் வேலைகளையே நம்பியிருக்கின்றனர். அவர்கள் பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டம் அல்லது வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் வருவதில்லை.
அதனால் இழப்பீடு முதற்கொண்டு கிடைப்பதில்லை.
ஆனால், அது போன்ற வேலைகளில் உள்ள கட்டுப்பாடுகளை பார்க்கும்போது, உண்மையில் அவர்களும் ஊழியர்கள் போன்றவர்கள்தான் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ பூ கூன் குறிப்பிட்டார்.
ஆதலால், மக்களுக்கு ஒரேவிதமான சேவைகளை வழங்கும் பட்சத்தில், விநியோகப் பணியை மேற்கொள்ளும் ஓர் ஊழியரையும் விநியோகப் பணித்தள ஊழியரையும் வெவ்வேறாகப் பார்க்க முடியாது என்பதை ஆலோசனைக் குழு கருத்தில்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.