ஒரு குழந்தை ஆரோக்கியமானதாகவும், படிப்பறிவு பெற்றவராக வளரவும், அவர்களின் முழு திறனை அடைவதற்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருவதிலும் சிங்கப்பூருக்கு நிகர் சிங்கப்பூர் தான். இதன் காரணத்தினால் தான் உலகின் மிகச் சிறந்த நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.
சமீப காலங்களில் சிங்கப்பூர் தனது திறமையை உலகிற்கு பறைசாற்றி வருகிறது. சிங்கப்பூர் படைத்துள்ள சாதனைகள் சில :
1. சிங்கப்பூர் தனது முதல் ஒலிம்பிக் தங்கம் பெற்று சாதனை படைத்துள்ளது.
2. 2020 ஒலிம்பிக் ‘Diver’ போட்டிக்கு சிங்கப்பூரர் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
3. முதல் சிங்கப்பூர் ஸ்கேட்டர், ஆசிய ஓபன் ஷாட்-டிராக் கோப்பைகான போட்டியில் ஆண்கள் (ஜூனியர்) 1000 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
4. 2019 உலக திறன்கள் (World Skills) போட்டியில் சிங்கப்பூர் 22 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.