சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்!

Video Crop Image

சிங்கப்பூர் நாட்டின் உள்துறை அமைச்சர் சண்முகம், விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து நேற்று (06/10/2022) சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகை மாவட்டத்திற்கு சென்றார். அங்கு அமைச்சருக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜவகர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஓய்வு நாள் கட்டாயம் – MOM அறிவிப்பு

அதைத் தொடர்ந்து, கார் மூலம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்குள் சென்ற அமைச்சர் சண்முகம், சுந்திரகணபதி, சிங்காரவேலர், வேல்நெடுங்கன்னி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும், சிறப்பு அபிஷேக ஆராதனையிலும் அமைச்சர் கலந்துக் கொண்டார்.