சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களை ஓய்வெடுப்பதற்காக தங்க அனுமதித்த விடுதிக்கு 30 நாட்கள் இடைநிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) தெரிவித்துள்ளது.
மேலும், COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஐந்து உணவு மற்றும் பானங்கள் (F&B) விற்பனை நிலையங்களுக்கு தலா S$1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை..!
கூடுதலாக, அங்கு முகக்கவசம் அணியத் தவறியதற்காக 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
STB-யின் விசாரணைகளின்படி, செப்டம்பர் 17 முதல் 260-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஓய்வெடுப்பதற்காக விடுதிக்குள் செக்-இன் செய்ய Hawaii விடுதி அனுமதித்துள்ளது.
சிங்கப்பூரில் தற்போது, வீடுகள் கிடைக்கவில்லை அல்லது வேலை மற்றும் உள்நாட்டு நிலைமைகள் காரணமாக அவர்களின் குடியிருப்பு இல்லாவிட்டால் மட்டுமே வாடிக்கையாளர்களை விடுதிக்குள் தங்க வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் Hawaii விடுதியை அக்டோபர் 11 முதல் நவம்பர் 9 வரை இடைநிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த இடைநிறுத்தம் உத்தரவிடப்பட்டுள்ள காலகட்டத்தில் புதிய முன்பதிவு அல்லது செக்-இன் செய்ய அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அக்டோபர் 8 முதல் அக்டோபர் 13 வரை மொத்தம் ஐந்து F&B விற்பனை நிலையங்களுக்கும் தலா S$1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக STB வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Far East Plaza-வில் உள்ள Bagus Sio Good, South Bridge Road-ல் உள்ள Chuan Yang Ji Mutton Soup Steamboat, Upper Cross Street-ல் உள்ள The Hot Gathering, Serangoon Road-ல் உள்ள Komala’s Restaurant ஆகிய கடைகளில் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களிடையே 1மீ பாதுகாப்பான இடைவெளியை உறுதி செய்யத் தவறிவிட்டன என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : உயிரிழந்த கணவர் நினைவாக வைத்திருந்த செல்போன் திருட்டு; 80 கி.மீ பயணம் செய்து மீட்ட நடத்துனர்..!