சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு நேற்று (பிப்.5) சுமார் 480க்கும் மேற்பட்டோர் திரும்பினர்!

vande bharath mission flight
(Photo: India in Singapore/Twitter)

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் நேற்று மட்டும் 8,598 பேர் இந்தியா வந்துள்ளனர்.

இந்திய அரசு, வந்தே பாரத் என்னும் சிறப்பு திட்டம் மற்றும் Air bubble திட்டத்தின் கீழ் தொடர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருகிறது.

வேலையிடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் – 280க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம்

மேலும், இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

நேற்று மட்டும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு 481 பேர் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 141 பேர் சென்றனர் மற்றும் சென்னைக்கும் பலர் திரும்பினர்.

இதனை இந்திய விமான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

1 சூன் லீ ஸ்ட்ரீட்டில் உள்ள தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியருக்கு தொற்று