சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த 2 ஊழியர்கள் கைது – சிறையில் அடைப்பு

ssingapore international travellers covid protocol india
Coimbatore Airport

சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் கடத்தி கொண்டு வந்த கிட்டத்தட்ட 6 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு விமானம் வந்தது, இதில் தங்கம் கடத்தல் நடப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி ஒருவரை சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, தங்க செயின்கள், வளையல்கள் என பல்வேறு கடத்தல் தங்கத்துடன் முகமது அப்சல் (32) என்ற பயணி வந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். மேலும், திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்பவரும் அதிகப்படியான தங்கம் கடத்தி கொண்டு வந்துள்ளார்.

2 பேரிடம் இருந்து மொத்தம் 5.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.