குவைத் தலைவர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் அழைப்பையேற்று 2 நாள் பயணத்தை மேற்கொண்டார்.
அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவுடனான அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களின் சந்திப்புக்கு முன்னர், பயன் (Bayan) அரண்மனையில் அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும், இரு நாடுகளுக்கும் இடையிலான அன்பான மற்றும் நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
கல்வித்துறையிலும் இருநாடுகளும் வலுவான உறவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய சபாநாயகர் மர்சோக் அலி அல் கானிம் மற்றும் பிரதமர் ஷேக் ஜாபர் அல் முபாரக் அல் ஹமாத் அல் சபா ஆகியோரை அதிபர் ஹலிமா சந்தித்தார், அங்கு பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை குறித்து மதிப்பாய்வு செய்தனர். மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பை வழங்க கலந்துரையாடினர்.
துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் சபா காலித் அல் ஹமாத் அல் சபா மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் நாசர் முகமது அல் அகமது அல் சபா ஆகியோரையும் அதிபர் ஹலிமா சந்தித்தார்.