சிங்கப்பூர்-மலேசியா நில எல்லைகள் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப். 1) மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழுவதுமாக திறக்கப்பட்டது.
முதல் நாள் மாலை 5 மணி நிலவரப்படி, உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் மொத்தம் 33,700 பயணிகள் கடந்து சென்றதாக சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று தெரிவித்துள்ளது.
இதில் 6,100 பேர் சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும், மேலும் 27,600 பேர் இரண்டு நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக மலேசியாவிற்கு சென்றதாகவும் CNAவின் கேள்விகளுக்கு பதிலளித்த ICA கூறியது.
இதில் பேருந்தின் மூலம் மட்டும், 3,500 பேர் சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும், மேலும் 9,400 பேர் மலேசியாவிற்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே போல, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் மட்டும் முறையே 1,600 மற்றும் 1,000 பேர் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர்.
மலேசியாவிற்கு முறையே 9,700 மற்றும் 8,500 பேர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் சென்றதாகவும் ICA கூறியுள்ளது.
இரு பேருந்துகள் பயங்கர விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – 37 பேர் மருத்துவமனையில் அனுமதி