போதைப்பொருள் கடத்தல்… 39 வயதான ஆடவருக்கு மரண தண்டனை – சிங்கப்பூர் கோர்ட் அதிரடி

singapore-man-executed-august-2023
Facebook

சிங்கப்பூரில் 39 வயதான ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

39 வயதான சிங்கப்பூர் ஆடவரான அவர், 54.04 கிராம் அளவுக்கு குறையாமல் போதைப்பொருள் கடத்தி பிடிபட்டார்.

துவாஸில் விபத்து: 32 வயதுமிக்க ஆடவர் மரணம்

மேற்கண்ட அளவைவிட அதிமான அளவு டயமார்பைன் அல்லது ஹராயின் வைத்திருந்ததற்காக அவருக்கு கடந்த ஆகஸ்ட் 3, 2023 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான சட்டத்தின்படி, 15 கிராமுக்கு மேல் டயமார்பைன் கடத்தி பிடிபட்டால் மரண தண்டனை வழங்கப்படும்.

2016 ஆம் ஆண்டு ஆக.11 அன்று மதியம், ஷாலே என்ற அவர் போதைப்பொருளுடன் பிடிபட்டார்.

இதனால் அவருக்கு 2019ஆம் ஆண்டு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், ஷாலே தனது மரண தண்டனைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஆனால், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 28, அன்று அவரின் மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லிட்டில் இந்தியாவில் உள்ள நாணய மாற்று வர்த்தகரிடம் திருட்டு – இருவர் நீதிமன்றத்தில்