அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், தலைநகர் டெல்லியில் நேற்று (17/09/2022) நடைபெற்ற இந்தியா- சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
இந்தியா- சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்ற வட்டமேசைக் கூட்டம்!
அதைத் தொடர்ந்து, இன்று (18/09/2022) தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். அவருக்கு பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார் முதலமைச்சர்.
ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அதிபர் ஹலிமா யாக்கோப்
இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உடனான சந்திப்பு அருமையாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையே கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.