சிங்கப்பூரின் தேசிய தினம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
தேசிய தினத்தில் நாட்டுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி வந்தனர். பலர் வாணவேடிக்கைகள், ஆட்டம் பாட்டம் என தேசிய தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இன்னும் பலர் தங்கள் பகுதிகளை சுத்தம் செய்வது போன்ற நற்கருமங்கள் மூலம் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதில் ஒரு பகுதியாக சிங்கப்பூரிலுள்ள மஸ்ஜித் அல் பிர்தவ்ஸ் பள்ளிவாசலில் வங்கதேசத்தை சேர்ந்த ஆயிரம் ஊழியர்களுக்கு இலவச பிரியாணி உணவு வழங்கும் நிகழ்வு நேற்று (25 August) நடைபெற்றது.
அதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: