சிங்கப்பூரில் தாங்கமுடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறதா? இதோ நல்ல செய்தி

Pic: Roslan RAHMAN/AFP

கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் தாங்கமுடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறதா? இதோ நல்ல செய்தி உங்களுக்காக.

இந்த அக்டோபர் மாதத்தின் இரண்டாவது பாதியில், அதிக இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூரோங்கின் புதிய தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் கவலை!

முதல் பாதியை ஒப்பிடுகையில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் பாதி ஈரப்பதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில், பெரும்பாலான நாட்களில் பிந்திய காலை மற்றும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் பெரும்பாலான நாட்களுக்கு தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34°C ஐ எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று: சிங்கப்பூரில் மேலும் எட்டு பேர் உயிரிழப்பு