‘ஓமைக்ரான்’ எனும் புதிய வகை கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளன.
இந்திய அரசும் தொற்று பாதிப்பு அபாயமுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது குறித்து நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம், அதில் சிங்கப்பூரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் நுழையும்/பயணிக்கும்/மாறும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் நாளை முதல் புதிய நடைமுறை!
சிங்கப்பூர் உட்பட அந்த பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே கட்டாய PCR பரிசோதனை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், பரிசோதனை முடிவுகளை அறிய சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் எஸ்.தர்மராஜ் கூறியுள்ளார்.
அந்த பட்டியலில் உள்ள நாடுகளில் சிங்கப்பூருக்கு மட்டுமே தமிழக பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதனால் அவர்கள் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
பயணிகள் சோதனை முடிவுகளை பெறும்வரை காத்திருக்க இடம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை பயணிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நிலவழி VTLகீழ் பயணம் செய்த ஆடவருக்கு கோவிட்-19 தொற்று