சிங்கப்பூரில் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த நபர்!

Photo: Millat Ahmad

சிங்கப்பூரில் சுகாதாரத் துறையில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் மில்லத் அகமது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வின்றிப் பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக காரைக்காலில் இறந்து போன தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், அவர் பெரிதும் மனமுடைந்தார்.

பற்றி எரிந்த தீ.. 2வது மாடியில் இருந்து குதித்த ஆடவர் – இவரை காப்பாற்ற வெளிநாட்டு ஊழியர் எடுத்த முயற்சிகள் வீண்

அந்த துயரத்தில் இருந்து மீண்டு எழுவதற்காக எழுதத் தொடங்கியவர், ‘அமராவதி’ என்ற வரலாற்று நாடகத்தை எழுதி, அதை நூலாக மாற்றினார். அந்த நூலை விரைவில் வெளியிட உள்ளார். ஏற்கனவே, இவர் எழுதிய சிங்கப்பூரில் சரவணன் என்ற நாவல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்த நூல் அமெரிக்க தமிழ்ப்பல்கலைக் கழக விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது பெற்றது.

தற்போதைய கொரோனா சூழலில் இருந்து தனது மனநிலையை மாற்றவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் யோசித்தார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாம் “கனவு என்பது தூக்கத்தில் வருவது இல்லை, எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அது தான் கனவு” என்று சொல்வார். அதேபோல் இவரும் பல நாட்கள் சிந்தித்து, கனவு பற்றிய சிறுகதையை எழுதினார்.

“எளிமையாகும் சிங்கப்பூரின் சட்ட மொழி” – 500க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் சட்டங்கள் படிக்க எளிதானதாக மாற்றம்

ஒவ்வொரு மனிதனும் கனவை நோக்கிப் பயணிக்கின்றனர். ஆனால், கொரோனா தொற்று பாதிப்பால் உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது கனவு நனவாகும் முன்பே இறந்து போயினர். அதை மனதில் வைத்து ஆங்கிலத்திலும், தமிழிலும் ஐந்து வார்த்தைகளில் ‘இறந்தவர் தனது கனவுகளைத் தோண்டி எடுக்கிறார்’ மிகச்சிறிய கதையை எழுதி, இதற்கு முன் ஆறு வார்த்தைகளில் சிறுகதை எழுதிய அமெரிக்க நாவலாசிரியர் எர்னஸ்ட் மில்லர் ஹெமிங்வேயின் சாதனையை முறியடித்து, மில்லத் புதிய உலக சாதனை படைத்தார்.

கடந்த 2012- ஆம் ஆண்டு நடிகர் ஜாக்கி சானின் ‘சோடியாக்’ என்ற சீன மொழி திரைப்படத்தில் 15 பொறுப்புகளைச் செய்து உலக சாதனை புரிந்தார். அவரின் வழியைப் பின்பற்றி ஒரு குறும்படத்தில், நடிப்பு (ஒரே ஒரு பாத்திரம்), ஒப்பனை, உடைகள், கலை, உதவி ஒளிப்பதிவு, பின்னணி, ஒலிக்கலவை, தலைப்புகள், தயாரிப்பு வடிவமைப்பு, எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என 16 பொறுப்புகளை ‘அறி’ என்ற தன்முனைப்புக் குறும்படத்தில் செய்துள்ளார்.

சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி: MOE பள்ளிகளில் முன்பதிவு தொடக்கம்

இதன் மூலம், ஒரு குறும்படத்தில் அதிக பொறுப்புகளைச் செய்த ஒரே நபர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார். மேலும் இந்தக் குறும்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது. குறிப்பாக, சிங்கப்பூர் திரைப்பட விழா விருது 2021 மற்றும் நோபல் சர்வதேச திரைப்பட விழா விருது 2021 வென்றது.

இந்த இரண்டு சாதனைகளும் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த நிலையில், அக்டோபர் 2021- ல் ‘கலாம் உலக சாதனைப் புத்தகத்தில்’ (KALAM’S WORLD RECORDS) பதிவு செய்யப்பட்டது. மேலும், சாதனை புரிந்த நபருக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டும் மெரினா பே வட்டாரத்தில் “புத்தாண்டு வாணவேடிக்கை” இல்லை

கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த அவருக்கு சிங்கப்பூரில் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றன.