சிங்கப்பூரில் மார்ச். 04 நிலவரப்படி, கொரோனா கிருமித்தொற்று காரணமாக மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
தொற்று தொடங்கியதிலிருந்து உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,067ஆக உள்ளது.
சிங்கப்பூரில் Employment Pass அனுமதிக்கு புதிய புள்ளிகள் முறை – வாங்க அதுபற்றி பார்ப்போம்!
கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி 18 இறப்புகள் பதிவாகியதில் இருந்து தற்போது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச COVID-19 இறப்புகளின் எண்ணிக்கை இதுவாகும்.
மருத்துவமனைகளில் உள்ளோர் விவரம்:
மருத்துவமனையில் உள்ள நோயாளிகள்: 1,678
ஆக்ஸிஜன் தேவை: 211
ICU அவசர சிகிச்சை பிரிவில்: 45
தடுப்பூசி நிலவரம்
சிங்கப்பூரில் தகுதியுடைய 95 சதவீத பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
அதே போல், 68 சதவீத பேர் (மொத்த மக்கள் தொகையில்) பூஸ்டர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.