சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் (Teo Chee Hean, Senior Minister & Coordinating Minister for National Security) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்றாட வழக்கப்படி நேற்று (20/07/2022) காலையில் ஏஆர்டி பரிசோதனை செய்துக் கொண்ட போது கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்றிரவு எங்கள் CCMC கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு மாதத்திற்கு முன்னர் நான் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டேன். எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ஏஆர்டி பரிசோதனையின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.