பகுதி நேர மற்றும் முழு நேர வேலை பார்த்த மூன்று குழந்தைகளின் தாய் மரணம் !

mother passed away aneurysm

46 வயதான மூன்று பிள்ளைகளின் ஒற்றைத் தாய் ஒருவர் மூலையில் ஏற்பட்ட இரத்த அடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார் இரண்டு நாட்களாக தலை மற்றும் கழுத்து வலியால் அவதிப்பட்ட Wang Huihui என்னும் அந்த பெண் ஜூலை 15 அன்று வீட்டில் காலமானார்.

ஜூலை 12 மாலை 5 மணிக்கு தனது தாய் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததாகவும், தனக்கு காய்ச்சல் இருப்பதாக கூறியதாகவும் அவரது 21 வயது மகள் கூறியுள்ளார். அப்போது அவரது தாய் தானாக சில மருந்துகளை உட்கொண்ட பிறகு காய்ச்சல் சற்று குறைந்தது என்றும் கூறியுள்ளார்.

அடுத்த நாள் நள்ளிரவு 1 மணியளவில், குடும்பத்தினர் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, எனது தாய் தனது தலைவலியை நண்பர் ஒருவரிடம் கூறினார். அதிகாலை 3 மணியளவில், தனது கழுத்தில் தாங்க முடியாத வலியை உணர்ந்துள்ளார். அதிகாலை 5 மணியளவில், வாந்தி எடுத்துள்ளார், இதில் சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்தார். பின்னர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் ஜூலை 15 அன்று இறந்தார்.

அவர் முழுநேரம் மற்றும்  பகுதி நேர பணிகளை மேற்கொண்டார் என்றும் பகுதி நேர பணியாக வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு பப்பில் உதவியாளராக பணியாற்றினார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் பகுதி நேர வேலை செய்யும் நாட்களில் நள்ளிரவு ஒரு மணிக்கு தான் வீடு திரும்புவார் என்றும் அவரது மகள் கூறியுள்ளார்.

மேலும் இது அனைவருக்கும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் ஏதேனும் தவறு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தயவுசெய்து மருத்துவ ஆலோசனையை முன்கூட்டியே பெறவும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.