சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய தந்தை… மகள் மர்மமான முறையில் மரணம் – கணவர் போலீசில் புகார்

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி - கைதான கதை

Tamil nadu Singapore: சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஊழியரின் மகளுக்கு ஏற்பட்ட மர்மமான மரணம் குறித்து கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

30 வயதுமிக்க மயூரான், மேலூரில் உள்ள திருவாதவூர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த 25 வயதான சிவரஞ்சனி என்ற பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறதாம், அவர்கள் தூத்துக்குடியில் வசித்து வருவதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், சிவரஞ்சனியின் தந்தை அய்யனார் என்பவர், கடந்த மே 25 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த ஜூன் 27 ஆம் தேதி தன் மகளை காண வேண்டி அய்யனார் விருப்பம் தெரிவிக்க, மயூரான் தன் மனைவியை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவாதவூருக்கு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார்.

இதனை அடுத்து, மயூரானுக்கு அதிர்ச்சியான செய்தி அலைபேசி வாயிலாக வந்துள்ளது, மனைவியின் அலைபேசியில் இருந்தே தன் மனைவி இறந்துவிட்டதாக மயூரானுக்கு செய்தி வந்துள்ளது.

இதில் பலத்த சந்தேகம் அடைந்த மயூரான் போலீசில் இது பற்றி புகார் கொடுத்துள்ளார், இந்நிலையில் மேலூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.