தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் தலைவர் ஆண்டியப்பன்!

Photo: Tamilnadu Chief Minister Official Twitter Page

 

மார்ச் 10- ஆம் தேதி அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மலேசியா நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவருமான டத்தோ எம்.சரவணன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான், சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத் தலைவர் முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா, மொரீசியஸ் மகாத்மா காந்தி கல்வி ஆய்வு மையத்தின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ஜீவன் செம்மன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது!

இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு இந்து சமயம்- அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.