சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணியிடம் 995.4 கிராம் தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணியிடம் 995.4 கிராம் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு (Air India Express) சொந்தமான IX683 என்ற விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு இன்று (ஆகஸ்ட் 15) வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சிக்னலை மதிக்காமல் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட 5 பேர்

அப்போது, பயணி ஒருவரின் கைப்பையை ஸ்கேன் செய்த போது, அதில் தங்கக்கட்டி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக, அந்த பயணியைத் தனியாக அழைத்து வந்த சுங்கத்துறை, முழுமையாக சோதனை நடத்தினர். எனினும், கைப்பையில் இருந்த தங்கக்கட்டி மட்டும் அவர் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த தங்கக்கட்டியைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். மதுரை விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சாங்கி விமான நிலையத்தில் போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்திய ஆடவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 995.44 கிராம் என்றும், அதன் மொத்த மதிப்பு 59.28 லட்சம் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.