சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற 3 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

Twitter Video Crop Image

சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர்.

மார்ச் 19- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு மூன்று பேர் விமானம் மூலம் மார்ச் 12- ஆம் தேதி அன்று காலை வந்தனர். பின்னர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக, திருப்பதிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி அருகே தர்மபுரம் கிராஸில் கார் சென்றுக் கொண்டிருந்த போது, எண்ணெய் நிரப்பிய டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அங்கிருந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாசரஸ் தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறு வீடுகள்….மே 1 முதல் பொதுமக்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்!

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், டேங்கர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.