சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானம், சென்னைக்கு மாற்றம்: கடும் அவதியை சந்தித்த பயணிகள்!

Singapore to trichy flight passengers covid update

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன,

இதில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் சமீபத்தில் அதிகரித்த வேலையிட மரணங்கள்: விபத்தை தடுக்க அசத்தல் திட்டத்துடன் MOM ரெடி

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 181 பயணிகளுடன், சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சியை நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் திருச்சி விமான நிலைய பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முடியாத சூழல் உருவானது. அதனை அடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பிவிடப்பட்டது.

இதனை காரணமாக பயணிகளும், அவர்களை அழைக்க வந்த உறவினர்களுக்கும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

கடைசியாக அந்த விமானம் இரவு 9.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய குழாயில் சிக்கிக்கொண்ட ஊழியர் உயிரிழப்பு – தொடரும் சோகம்