சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் நடுவானிலே உயிரிழந்த பயணி!

Trichy airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஷார்ஜா, கத்தார், சவூதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள், திருச்சியில் இருந்து விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!

இந்த நிலையில், ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம், திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து, பயணிகள் ஒவ்வொருவருவராக இறங்கிய நிலையில், ஆனால் ஒருவர் மட்டும் இறங்காமல் இருக்கையிலேயே இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து, விமான பணியாளர்கள் அவரை எழுப்ப முயன்றனர். இருப்பினும் அவர் எவ்வித அசைவும் இன்றி இருக்கையிலேயே இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்தப் பணியாளர்கள், உடனடியாக விமான நிலையத்தின் மருத்துவக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி பரிசோதனை செய்தனர். அதில், அந்த பயணிக்கு நடுவானிலே ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக இறந்தது தெரிய வந்தது.

சூரிய கிரஹணம்: இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

விசாரணையில், உயிரிழந்த பயணியின் பெயர் முனியசாமி (வயது 36) என்பதும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், பணி நிமித்தமாக சிங்கப்பூருக்கு சென்ற முனியசாமி, ஓராண்டுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், உயிரிழந்திருப்பது சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, முனியசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.