சிங்கப்பூர் TOTO டிராவில் முதல் பரிசை யாரும் வெற்றி பெறாததால் “12 பேருக்கு அடித்த செம்ம அதிஷ்டம்”

Singapore toto-no-group-1-winner
Google Maps

சிங்கப்பூரில் டோட்டோ (Toto) டிரா குலுக்கலில் மூன்று முறை முதல் பரிசை யாரும் வெற்றிபெறாத காரணத்தால் முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன் என்ற இமாலய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், நடந்து முடிந்த 4வது குலுக்கலிலும் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்பதால் இரண்டாம் பரிசு வெற்றியாளர்களுக்கு முதல் பரிசுத் தொகையும் சேர்த்து பிரித்து வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) விதிகளின்படி, முதல் பரிசை (குரூப் 1) நான்கு டிரா குலுக்களிலும் யாரும் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாம் பரிசு (குழு 2) வெற்றியாளர்களுக்கு முதல் பரிசை பிரித்து வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில், இரண்டாம் பரிசு வென்ற 12 வெற்றியாளர்களுக்கு முதல் பரிசான S$12,791,400 தொகையும் சேர்த்து பிரித்து வழங்கப்படுகிறது.

அதாவது வெற்றிபெற்ற ஒவ்வொரு நபரும் குரூப் 2 பரிசு உட்பட தோராயமாக S$1.19 மில்லியன் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.

வெற்றிபெற்ற டிக்கெட்டுகளில் பெரும்பாலானவை சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளில் வாங்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல்.

வாகனம் மோதி சிறுவன் மரணம் – ஓட்டுனருக்கு சிறை, அனைத்து வகுப்பு ஓட்டுநர் உரிமமும் ரத்து

சிங்கப்பூர் டோட்டோ (Toto) டிரா: முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன் – வெற்றி பெற கடும் போட்டி