சிங்கப்பூரில் இருந்து சென்ற சுற்றுலா பேருந்து மலேசியாவில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் அலட்சியம்… பறிபோன அப்பாவி ஊழியரின் உயிர் – MOM கடும் நடவடிக்கை
இதில் பேருந்து ஓட்டுநர் மற்றும் இந்தோனேசிய பெண் பயணி ஒருவரும் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. காரில் இருந்த ஆண் மற்றும் பெண் இருவரும் காயமின்றி தப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் La Holidays coach பேருந்து மற்றும் கார் ஒன்றும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
பேருந்து சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூருக்குச் சென்றதாககவும், இந்த விபத்து இன்று (ஜூலை 10) அதிகாலை 5 மணியளவில் நடந்ததாகவும் சின் ஷிவ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. பேருந்தில் 20 பேர் பயணம் செய்தனர்.
பேருந்தில் இருந்த மற்ற 15 பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கோர விபத்தால் சுமார் 14 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரி, 5 பைக்குகள் மோதி விபத்து: 5 பேர் மருத்துவமனையில்…