சிங்கப்பூரில் இருந்து திருச்சி… பேஸ்ட் வடிவ பொருளுடன் பிடிபட்ட ஊழியர்

singapore trichy airport flights

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் உள்ளாடையில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தி பிடிபட்டார்.

ஏர் இந்தியா விமானம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையம் வந்தது. அதில் இருந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த ஊழியர் ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வர அவரை தீவீரமாக சோதித்தனர்.

அதனை அடுத்து அவரை தனியாக அழைத்து சோதித்ததில் அவரின் உள்ளாடையில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 281 கிராம் என்றும் அதன் மதிப்பு ரூ.15,75,567 என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.