சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 2 பயணிகளிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்!

singapore-to-trichy traveler

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 73 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் – தமிழ்நாடு இடையே வந்தே பாரத் சிறப்பு திட்டம் மூலம் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

மலேசிய சரக்கு லாரி ஓட்டுனர்களுக்கு சிங்கப்பூரில் தடுப்பூசி – ஓட்டுனர்கள் வரவேற்பு!

குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு அதிக விமானங்கள் இயங்குகின்றன.

இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் வந்த இரண்டு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அவர்களின் உடலில் மறைத்து வைத்திருந்த, சுமார் ஆயிரத்து ஐநூறு கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

16 வயது சிறுமியை காணவில்லை – தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு போலீஸ் வேண்டுகோள்