இன்று (டிச. 7) முதல் தடுப்பூசி போடப்பட்ட பயண ஏற்பாடுகளின்கீழ் (VTL) விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளும், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) எடுக்க வேண்டும்.
கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவலுக்கு மத்தியில், சிங்கப்பூரில் சோதனை நடைமுறை தீவிரப்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த 24 பேர் தனிமை – தீவீர கண்காணிப்பு
அதாவது, புறப்படுவதற்கு முந்தைய சோதனை, வருகையின்போது PCR சோதனை, அத்துடன் மேற்பார்வையின்கீழ் ART விரைவு சோதனைகளை 3 மற்றும் 7ஆம் நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்பது முந்தைய நடைமுறை.
அதனை அடுத்து, கடந்த டிசம்பர் 3 அன்று சுகாதார அமைச்சகம் (MOH) VTL பயணிகளுக்கான சோதனை முறையைப் புதுப்பித்தது.
அதில் கூறியதாவது: விமானம் மற்றும் நிலம் ஆகிய இரண்டின் வழியாக, டிசம்பர் 7ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து VTL பயணிகளும் தினசரி ஏழு நாட்களுக்கு ART சோதனை மேற்கொள்வது கட்டாயம் என அமைச்சகம் அறிவித்தது.
அனைத்து VTL பயணிகளும் மேற்கொள்ள வேண்டியவை:
சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு 2 நாட்களுக்குள் (pre-departure test) மேற்கொள்ளப்படும் சோதனை
சிங்கப்பூர் வந்தவுடன் ஆன்-அரைவல் என்னும் வருகையின்போது PCR சோதனை
3 மற்றும் 7 நாட்களில் ஒருங்கிணைந்த சோதனை நிலையம் அல்லது விரைவு சோதனை நிலையத்தில் மேற்பார்வையின்கீழ் ART சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
2, 4, 5 மற்றும் 6ஆம் நாட்களில் சுயமாக ART சோதனை மேற்கொள்ள வேண்டும்.
பயணிகள் தங்கள் சுயமான சோதனை முடிவுகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
சிங்கப்பூரில் இரண்டு வாரங்களாக 14 வயது சிறுமியை காணவில்லை – தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள்