சிங்கப்பூர் – இந்தியா இடையிலான பயணம்: சென்னை உள்ளிட்ட 3 நகரங்களிலிருந்து ஆறு தினசரி விமானங்களுடன் தொடங்கும்!

சிங்கப்பூர் – இந்தியா இடையிலான VTL சிறப்பு பயணம் வரும் நவம்பர் 29 அன்று இந்தியாவின் முக்கிய மூன்று நகரங்களிலிருந்து ஆறு நியமிக்கப்பட்ட தினசரி விமானங்களுடன் தொடங்கும்.

அதாவது சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய முக்கிய மூன்று நகரங்களிலிருந்து அந்த சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 235 மினிபேருந்துகள்: முன்பதிவு செய்ய நிறுவனங்கள் முன்வருமா?

இந்தியாவில் இருந்து வரும் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கு VTL பயண அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் சிங்கப்பூர் நேரப்படி நாளை (நவம்பர் 22) மாலை 6 மணிக்குத் தொடங்கும்.

இதனை சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே திட்டமிடப்பட்ட வணிக பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக CAAS தெரிவித்துள்ளது.

விமான நிறுவனங்கள் VTL அல்லாத விமானங்களையும் இயக்கலாம், ஆனால் VTL அல்லாத விமானங்களில் சிங்கப்பூருக்கு பயணிக்கும் பயணிகள் நடைமுறையில் உள்ள பொது சுகாதாரத் தேவைகளுக்கு உட்பட வேண்டும்.

மேலும் , VTL மற்றும் VTL அல்லாத விமானங்களுக்கான அட்டவணையை விமான நிறுவனங்கள் தயாரானதும் அறிவிக்கும் என்றும் CAAS கூறியது.