சிங்கப்பூரில் இந்த ஏப்ரல் மாதம் அதிக வெயில்… இடியுடன் கூடிய மழை!

PHOTO: Roslan Rahman/AFP/Getty Images

சிங்கப்பூரில் இந்த ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும், ஆனால் பொதுவாக வெப்பமான நாட்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பமான வானிலையுடன் இடைப்பட்ட நேரத்தில் பருவமழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வகம் (MSS) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு: குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் – இலவசம்!

ஏனென்றால், பருவமழை மண்டலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் என்றும், இதனால் சிங்கப்பூரில் அதிக மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வெப்பமான மாதங்களில் ஒன்று என்றும், பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24°C முதல் 34°C வரை இருக்கும் என்றும் MSS கூறியது.

அதே போல, மேகங்கள் குறைவாக இருக்கும் நாட்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35°C அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் எனவும் அது கணித்துள்ளது.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு அதிக தேவை… தொடரும் கட்டுப்பாடுகள் – அதிக சம்பளம் கொடுக்க முதலாளிகள் ரெடி!