சட்டென்று மாறிய வானிலை… சிங்கப்பூர் முழுவதும் இலேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெளியான வானிலை அறிக்கை!

சிங்கப்பூரில் வானிலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீவு முழுவதும் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. இன்று (ஜனவரி 24) அதிகாலையில் லேசான சாரல் மழை பெய்துள்ள நிலையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிடைத்துள்ள தகவலின்படி, சிங்கப்பூரின் வடக்கு,கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் லேசான மழைக்கும், தெற்கு,மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பின்படி, இன்றைய வெப்பநிலை 23°C முதல் 28°C வரை இருக்கும், அதே போல் அடுத்த இரண்டு நாட்களுக்கும் 22°C வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தினசரி வெப்பநிலை 24°C முதல் 32°C வரை இருக்கும் என்றும், சில நாட்களில் அதிகபட்சமாக 33°C வரை இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த மாத இறுதியில் தீவின் சிலபகுதிகளில் லேசான மழையுடன் வானிலை மாற வாய்ப்புள்ளதாகவும், ஆனால், ஆங்காங்கே பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.